பாடல் எண் :3719
அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்
படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்
படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே
மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------
திருமுன் விண்ணப்பம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்