அந்நாணை யாதுநஞ் சேற்றயன் மால்மனை யாதியர்தம் பொன்னாணைக் காத்த அருட்கட லேபிறர் புன்மனைபோய் இந்நாணை யாவகை என்னாணைக் காத்தருள் ஏழைக்குநின் தன்னாணை ஐயநின் தாளாணை வேறு சரணில்லையே