பாடல் எண் :366
அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ
எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே
பாடல் எண் :3295
அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே
பாடல் எண் :5813
அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே
திருச்சிற்றம்பலம்
டீயஉம
--------------------------------------------------------------------------------
சத்திய வார்த்தை ()
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்