பாடல் எண் :469
ஆறு முகமும் திணிதோள்ஈ ராறும் கருணை அடித்துணையும்
வீறு மயிலும் தனிக்கடவுள் வேலும் துணைஉண் டெமக்கிங்கே
சீறும் பிணியும் கொடுங்கோளும் தீய வினையும் செறியாவே
நாறும் பகட்டான் அதிகாரம் நடவா துலகம் பரவுறுமே
திருச்சிற்றம்பலம்
எழுசீர்தொவே அறுசீர் சமுக ஆபா
செல்வச் சீர்த்தி மாலை
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் :528
ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
டாறு புயந்திகழ் அற்புதமும்
வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்
பாடல் எண் :769
ஆறு யாண்முகத் தமுதெழும் கடலே
அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே
பாடல் எண் :1874
ஆறு முகத்தார் தமையீன்ற
வைந்து முகத்தா ரிவர்தமைநான்
மாறு முகத்தார் போலொற்றி
வைத்தீர் பதியை யென்னென்றே
னாறு மலர்ப்பூங் குழனீயோ
நாமோ வைத்த துன்மொழிமன்
றேறு மொழியன் றென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
பாடல் எண் :1964
ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்
பேறு மிகத்தான் பெரிது
கலிவெண்பா
பாடல் எண் :5552
ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்