பாடல் எண் :420
இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற
மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே
துன்னும் நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயில்ஏறி
மன்னும் உத்தம வள்ளலே நின்திரு மனக்கருத் தறியேனே
பாடல் எண் :823
இன்னும் பற்பல நாளிருந் தாலும்
இக்க ணந்தனி லேஇறந் தாலும்
துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே
திருவருள் வழக்க விளக்கம்
திருவொற்றியூர்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் :1124
இன்னும் எங்ஙனம் ஏகுகின் றனையோ
ஏழை நெஞ்சமே இங்குமங் குந்தான்
முன்னை நாம்பிறந் துழன்றஅத் துயரை
முன்னில் என்குலை முறுக்குகின் றனகாண்
என்னை நீஎனக் குறுதுணை அந்தோ
என்சொல் ஏற்றிலை எழில்கொளும் பொதுவில்
மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால்
மற்று நாம்பிற வாவகை வருமே