பாடல் எண் :616
இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
தில்லை மன்றில் சிவபரம் சோதியே
வல்லை யான்செயும் வஞ்சமே லாம்பொறுத்
தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே
மேற்படி வேறு
பாடல் எண் :760
இல்லை உண்டென எய்தி ஐயுறும்
கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
நல்லை நல்லைநீ நட்பின் மேலையே
பாடல் எண் :808
இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோ ர்
ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
தூய என்றடி தொழுதுநாம் உற்ற
அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே
பாடல் எண் :1357
இல்லை இல்லைகாண்
ஒல்லை ஒற்றியூர்
எல்லை சேரவே
அல்லல் என்பதே