பாடல் எண் :3169
உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம்
ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி
முன்னுதற்கோர் அணுத்துணையுந் தரமில்லாச் சிறியேன்
முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய்
துன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத்
துணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்றேன்
பொன்னுதற்குத் திலகமெனுஞ் சிவகாம வல்லிப்
பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------
ஆனந்த மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்