உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக் கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும் அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே
உள்ளத் தனையே போலன்ப ருவக்குந் திருவா ழொற்றியுளீர் கள்ளத் தவர்போ லிவணிற்குங் கரும மென்னீ ரின்றென்றேன் மெள்ளக் கரவு செயவோநாம் வேட மெடுத்தோ நின்சொனினை யெள்ளப் புரிந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ