எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் ஏக்கற்றி ருக்கும்வெறுவாய் எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை இகழ்விற கெடுக்கும்தலை கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண் கலநீர் சொரிந்தஅழுகண் கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி கைத்திழவு கேட்கும்செவி பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம் பகீர்என நடுங்கும்நெஞ்சம் பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை பலிஏற்க நீள்கொடுங்கை சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே