பாடல் எண் :5476
என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே
திருச்சிற்றம்பலம்
டீயஉம
--------------------------------------------------------------------------------
உற்ற துரைத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்