பாடல் எண் :1037
என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே
பாடல் எண் :1060
என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா
தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான்
உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல்
ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல்
இன்ன தென்றறி யாமல இருளில்
இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே
அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே
பாடல் எண் :1192
என்ன நான்அடி யேன்பல பலகால்
இயம்பி நிற்பதிங் கெம்பெரு மானீர்
இன்னும் என்னைஓர் தொண்டன்என் றுளத்தில்
ஏன்று கொள்ளிரேல் இருங்கடற் புவியோர்
பன்ன என்உயிர் நும்பொருட் டாகப்
பாற்றி நும்மிசைப் பழிசுமத் துவல்காண்
துன்னு மாதவர் புகழ்ஒற்றி உடையீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே
டீயஉம
--------------------------------------------------------------------------------
மருட்கை விண்ணப்பம்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :1536
என்ன கொடுத்தும் கிடைப்பரியார்
எழிலார் ஒற்றி நாதர்எனைச்
சின்ன வயதில் மாலையிட்டுச்
சென்றார் சென்ற திறன்அல்லால்
இன்னும் மருவ வந்திலர்காண்
யாதோ அவர்தம் எண்ணமது
கொன்னுண் வடிவேற் கண்ணாய்என்
குறையை எவர்க்குக் கூறுவனே
பாடல் எண் :4487
என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்தே னோ
பல்லவி எடுப்பு
பாடல் எண் :4968
என்ன துடலும் உயிரும் பொருளும் நின்ன தல்ல வோ
எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ
சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே
சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்கு தே எனக்கும் உனக்கும்
உயிரும் உடலும் - ச மு க
பெருகி - ச மு க