என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர் முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார் நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர் பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே
என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார் என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார் பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப் புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம் அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே