என்போன் மனிதரை ஏன்அடுப் பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம் பொன்போல் விளங்கும் புரிசடை யான்றனைப் போயடுத்தேன் துன்போர் அணுவும் பெறேன்இனி யான்என்று சொல்லிவந்தேன் முன்போல் பராமுகஞ் செய்யேல் அருளுக முக்கணனே