எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும் எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே செம்பொருள் என்பது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி
எம்பொருள் எனும்என் அன்புடை மகனே இரண்டரைக் கடிகையில் உனக்கே அம்புவி வானம் அறியமெய் அருளாம் அனங்கனை() தனைமணம் புரிவித் தும்பரும் வியப்ப உயர்நிலை தருதும் உண்மைஈ தாதலால் உலகில் வெம்புறு துயர்தீர்ந் தணிந்துகொள் என்றார் மெய்ப்பொது நடத்திறை யவரே () அங்கனை - முதற்பதிப்பு, பொ சு; பி இரா, ச மு க