பாடல் எண் :152
ஐய னேநினை அன்றி எங்கணும்
பொய்ய னேற்கொரு புகல்இ லாமையால்
வெய்ய னேன்என வெறுத்து விட்டிடேல்
மெய்ய னேதிருத் தணிகை வேலனே
பாடல் எண் :423
ஐய இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
வெய்ய நெஞ்சினர் எட்டொனா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே
பாடல் எண் :1130
ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய்
வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ
செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே
பாடல் எண் :2764
ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள் நீர்என தாண்டவர் ஆகில்
பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்புன்கணும்தவிர்த் தருளுதல்வேண்டும்
தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச் சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
மெய்ய ரேமிகு துய்யரே தரும விடைய ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே
வேறு