ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன் உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய் வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன் மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே