Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3066
ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்

உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து

வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது

தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்

மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.