பாடல் எண் :84
கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே
பாடல் எண் :893
கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
காலில் போந்துமுன் காணரு முடியார்
அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
அம்மை காணநின் றாடிய பதத்தார்
செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
மறாது நீஉடன் வருதிஎன் மனனே
பாடல் எண் :1526
கஞ்சன் அறியார் ஒற்றியினார்
கண்மூன் றுடையார் கனவினிலும்
வஞ்சம் அறியார் என்றனக்கு
மாலைஇட்ட தொன்றல்லால்
மஞ்சம் அதனில் என்னோடு
மருவி இருக்க நான்அறியேன்
கொஞ்சம் மதிநேர் நுதலாய்என்
குறையை எவர்க்குக் கூறுவனே