கற்கோட்டை நெஞ்சருந் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச் சொற்கோட்டை யாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்தடுத்தேன் அற்கோட்டை நெஞ்சுடை யேனுக் கிரங்கிலை அன்றுலவா நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை யோமுக்கண் நின்மலனே