கற்றமே லவரொடும் கூடிநில் லேன்கல்வி கற்கும்நெறி தேர்ந்துகல்லேன் கனிவுகொண் டுனதுதிரு அடியைஒரு கனவினும் கருதிலேன் நல்லன்அல்லேன் குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங் குற்றம்எல் லாம்குணம்எனக் கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என் குறைதவிர்த் தருள்புரிகுவாய் பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப் பெற்றெழுந் தோங்குசுடரே பிரணவா காராரின் மயவிமல சொருபமே பேதமில் பரப்பிரமமே தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே
கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் கலகர்தம் உறவினிற் களித்தேன் உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியற் போகமே உவந்தேன் செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன் குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே