பாடல் எண் :5773
காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே
பாடல் எண் :5774
காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்
கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்
அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்
தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்
தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே
திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி