பாடல் எண் :680
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
குணம்எ னக்கொளம் குணக்கடல் என்றே
மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே
பாடல் எண் :960
குற்றம் செயினும் குணமாக் கொண்டருளும்
நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றிஅப்பா என்கருத்து
முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ
பாடல் எண் :2039
குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள்
சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே - வெற்றம்பல்
பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ
கைவிட்டால் என்செய்கேன் காண்
பாடல் எண் :3620
குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
குணமே கொளும்என் குருவே அபயம்
பற்றம் பலமே அலதோர் நெறியும்
பதியே அறியேன் அடியேன் அபயம்
சுற்றம் பலவும் உனவே எனவோ
துணைவே றிலைநின் துணையே அபயம்
சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------
பிரிவாற்றாமை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :4345
குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே அபயம்
பாடல் எண் :5350
குற்றம் புரிதல் எனக்கியல்பே
குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
சிற்றம் பலவா இனிச்சிறியேன்
செப்பும் முகமன் யாதுளது
தெற்றென் றடியேன் சிந்தைதனைத்
தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
இற்றைப் பொழுதே அருட்சோதி
ஈக தருணம் இதுவாமே