பாடல் எண் :4233
கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே
--------------------------------------------------------------------------------
ஞானசிதம்பர வெண்பா: தில்லையும் பார்வதிபுரமும்
நேரிசை வெண்பா
பாடல் எண் :5736
கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ