கூடும் படிமுன் திருமாலும் கோல மாகிப் புவி இடந்து தேடும் திருத்தாள் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி நாடும் புகழ்சேர் ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால் ஈடும் அகன்றேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ