பாடல் எண் :1008
கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம்
கண்ட பாவியே காமவேட் டுவனே
இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன்
இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய்
ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே
பாடல் எண் :1034
கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ
அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம்
ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன்
நெடிய மால்அயன் காண்கில ரேனும்
நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன்
பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர்
பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ
பாடல் எண் :1110
கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
ஒற்றி மேவிய உலகுடை யோனே
பாடல் எண் :1158
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும்ஓர்
குரங்கிற் கென்உறு குறைபல உரைத்தும்
கடிய தாதலின் கசிந்தில தினிஇக்
கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
அடிய னேன்பிழை உளத்திடை நினையேல்
அருளல் வேண்டும்என் ஆருயிர்த் துணையே
செடிகள் நீக்கிய ஒற்றிஎம் உறவே
செல்வ மேபர சிவபரம் பொருளே
டீயஉம
--------------------------------------------------------------------------------
திருவண்ண விண்ணப்பம்
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
பாடல் எண் :1317
கொடிய பாவியேன் படும்பரி தாபம்
குறித்துக் கண்டும்என் குறைஅகற் றாது
நெடிய காலமும் தாழ்த்தனை நினது
நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்ததுண் டேயோ
அடியர் தந்துயர் கண்டிடில் தரியார்
ஐயர் என்பர்என் அளவஃ திலையோ
ஒடிய மாதுயர் நீக்கிடாய் என்னில்
உனைஅ லால்எனை உடையவர் எவரே
பாடல் எண் :3307
கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
வேட னேன்முழு மூடரில் பெரியேன்
அடிய னாவதற் கென்செயக் கடவேன்
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே