சகம்ஆ றுடையார் அடையா நெறியார் சடையார் விடையார் தனிஆனார் உகமா ருடையார் உமைஓர் புடையார் உதவும் உரிமைத் திருமகனார் முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார் எனவே எனது முன்வந்தார் அகமா ருடையேன் பதியா தென்றேன் அலைவாய் என்றார் அஃதென்னே