பாடல் எண் :3236
சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே()
இஃதோர் தனிப்பாடல் இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொவே பதிப்பித்துள்ளார்
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------
ஆளுடைய அரசுகள் அருண்மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்