பாடல் எண் :775
தண்ணார் நீபத் தாரா னொடும்எம் தாயோ டும்தான் அமர்கின்ற
கண்ணார் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
பண்ணார் இன்சொல் பதிகம் கொண்டு படிக்கா சளித்த பரமன்ஓர்
பெண்ணார் பாகன் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே
பாடல் எண் :1383
தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப்
பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக்
கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள
ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே
பாடல் எண் :1773
தண்ணார் மலரை மதிநதியைத்
தாங்குஞ் சடையா ரிவர்தமைநா
னண்ணா லொற்றி யிருந்தவரே
யைய ரேநீர் யாரென்றே
னண்ணா ரிடத்து மம்பலத்து
நடவா தவர்நா மென்றுசொலி
யெண்ணா தருகே வருகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ