பாடல் எண் :4766
தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு()
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே
() தனித்துண்டு வயிறும் - முதற்பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க
திருச்சிற்றம்பலம்
டீயஉம
--------------------------------------------------------------------------------
திருவருட்பேறு
நேரிசை வெண்பா