தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே