பாடல் எண் :879
தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
மாது வேண்டிய நடனநா யகனார்
வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
பாடல் எண் :1311
தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன்
தீய னேன்கொடுந் தீக்குண இயல்பே
ஏது செய்தன னேனும்என் தன்னை
ஏன்று கொள்வதெம் இறைவநின் இயல்பே
ஈது செய்தனை என்னைவிட் டுலகில்
இடர்கொண் டேங்கென இயம்பிடில் அடியேன்
ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
உனைஅ லால்எனை உடையவர் எவரே
பாடல் எண் :1538
தீது தவிர்ப்பார் திருவொற்றித்
தியாகர் அழியாத் திறத்தர்அவர்
மாது மகிழ்தி எனஎன்னை
மாலை யிட்டார் மாலையிட்ட
போது கண்ட திருமுகத்தைப்
போற்றி மறித்தும் கண்டறியேன்
கோது கண்டேன் மாதேஎன்
குறையை எவர்க்குக் கூறுவனே
பாடல் எண் :1739
தீது தவிர்க்கு மொற்றியுளீர்
செல்ல லறுப்ப தென்றென்றேன்
ஈது நமக்குந் தெரியுமென்றா
ரிறையா மோவிங் கிதுவென்றேன்
ஓது மடியர் மனக்கங்கு
லோட்டு மியாமே யுணரென்றார்
ஆது தெரியே னென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே
பாடல் எண் :1827
தீது தவிர்க்கு மொற்றியுளீர்
செல்ல லறுப்ப தென்றென்றே
னீது நமக்குத் தெரிந்ததென்றா
ரிறையா மோவிங் கிதுவென்றே
னோது மடியார் மனக்கங்கு
லோட்டு நாமே யுணரன்றி
யேது மிறையன் றென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
பாடல் எண் :3330
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே