பாடல் எண் :1046
தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே
சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே
ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில்
ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண்
நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து
நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே
ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே
டீயஉம
--------------------------------------------------------------------------------
பிரசாத விண்ணப்பம்
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :4832
தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்
தாங்கினேன் சத்தியமாத் தான்
பாடல் எண் :4897
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
இன்னமுது உண்டேன்என்று உந்தீபற
பாடல் எண் :5270
தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே
ஏம சபையான்என்று ஊதூது சங்கே