பாடல் எண் :1128
தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
காய மாயமாம் கான்செறிந் துலவும்
கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
காய சோதிகண் டமருதல் அணியே
டீயஉம
--------------------------------------------------------------------------------
சிவானந்தப் பத்து
திருவொற்றியூரும் திருத்தில்லையும்
எண்சீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
() எழுசீர் - தொவே ,; எண்சீர் - சமுக் ஆபா
பாடல் எண் :3776
தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்
சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக
மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க
எந்தை நின்மலர் இணைஅடி அல்லால்
தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே
பாடல் எண் :5243
தூய சதாகதியே நேய சதாசிவமே
சோம சிகாமணியே வாம உமாபதியே
ஞாய பராகரமே காய புராதரமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே