தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும் பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும் மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார் எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர் எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- சிவபுண்ணியப் பேறு எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்