Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2503
நின்பால் அறிவும் நின்செயலும் நீயும் பிறிதன் றெமதருளே

நெடிய விகற்ப உணர்ச்சிகொடு நின்றாய் அதனால் நேர்ந்திலைகாண்
அன்பால் உன்பால் ஒருமொழிதந் தனம்இம் மொழியால் அறிந்தொருங்கி

அளவா அறிவே உருவாக அமரென் றுணர்த்தும் அரும்பொருளே
இன்பால் என்பால் தருதாயில் இனிய கருணை இருங்கடலே

இகத்தும் பரத்தும் துணையாகி என்னுள் இருந்த வியனிறைவே
தென்பால் விளங்குந் திருவோத்தூர் திகழும் மதுரச் செழுங்கனியே

தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.