நீண்ட மால்அர வாகிக்கி டந்துநின் நேயத் தால்கலி நீங்கிய வாறுகேட் டாண்ட வாநின்அ டைக்கலம் ஆயினேன் அடியனேன்பிழை ஆயிர மும்பொறுத் தீண்ட வாவின்ப டிகொடுத்தென்னைநீஏன்றுகொள்வதற்கெண்ணு தியாவரும் வேண்டு வாழ்வுத ரும்பெருந் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப் பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே