பந்த வண்ணம்஑ம் மடந்தையர் மயக்கால் பசையில் நெஞ்சரால் பரிவுறுகின்றாய் எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து சந்த மாம்புகழ் அடியரில் கூடிச் சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி உந்த ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே
பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால் பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன் இந்த மட்டில்நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன் அந்த மட்டினில் இருத்தியோ அன்றி அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகுடை யோனே