பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண் போக்கிநன் னாளைமடவார் போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின் பொன்னடிக் கானபணியைச் செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில் செய்வதறி யேன்ஏழையேன் சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல சிந்தைதனில் எண்ணிடாயோ மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள வேண்டுமறை யாகமத்தின் மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த மேதையர்கள் பரவிவாழ்த்தும் ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர வம்புலியு மாடமுடிமேல் அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே
பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள் செய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர் எய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய் அய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே