Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1013
மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ 

வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா 
சிதமெ னும்பரன் செயலினை அறியாய் 

தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் 
இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார் 

யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க் 
குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.