மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச் சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன் திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே