பாடல் எண் :936
முத்தி முதலே முக்கணுடை முரிக் கரும்பே நின்பதத்தில்
பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே
பாடல் எண் :1003
முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
பத்தி நீறிடும் பத்தர்க்ள் காலால்
பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
போற்ற லார்புரம் பொடிபடி நகைத்தோன்
சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே
பாடல் எண் :1191
முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
முந்து றேன்அவர் முற்பட வரினும்
சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத்
தொண்டர் தம்முடன் சூழ்த்திடீர் எனினும்
புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே
பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே
துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே
பாடல் எண் :1352
முத்தி வேண்டுமேல்
பத்தி வேண்டுமால்
சத்தி யம்இது
புத்தி நெஞ்சமே