Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3124
மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த

மோனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி

உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து

புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்

நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.