யாரை யுந்துணை கொண்டிலேன் நின்அடி இணைதுணை அல்லால்நின் பேரை உன்னிவாழ்ந் திடும்படி செய்வையோ பேதுறச் செய்வாயோ பாரை யும்உயிர்ப் பரப்பையும் படைத்தருள் பகவனே உலகேத்தும் சீரை உற்றிடும் தணிகைஅம் கடவுள்நின் திருவுளம் அறியேனே
யாரை யுங்கடு விழியினால் மயக்குறும் ஏந்திழை அவர்வெந்நீர்த் தாரை தன்னையும் விரும்பிவீழ்த் தாழ்ந்தஎன் தனக்கருள் உண்டேயோ காரை முட்டிஅப் புறம்செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர்ஆழித் தேரை எட்டுறும் பொழில்செறி தணிகையில் தேவர்கள் தொழும்தேவே