வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன் வள்ளல்உன் சேவடிக்கண் மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன்குரங்கோ பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ பேதைவிளை யாடுபந்தோ காய்கொண்டு பாய்கின்ற வௌ;விலங் கோபெருங் காற்றினாற் சுழல்கறங்கோ காலவடி வோஇந்திர ஜாலவடி வோஎனது கர்மவடி வோஅறிகிலேன் தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே