வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி வேணிப் பெருமான் ஒற்றிநகர் செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக் கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன் இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ