Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2113
அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்

கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன

வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்

கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்

சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே
பாடல் எண் :4465
அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர் 

அகண்டபரி பூரணரே ஆடவா ரீர் 
பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர் 

பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர் 
கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர் 

கூத்தாட வல்லவரே ஆடவா ரீர் 
எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்  ஆடவா ரீர்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.