Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3056
அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே

அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே

செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு

மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்

என்னுடைய நாயகனே இதுதருணங் காணே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.