அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான் மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இதுதருணங் காணே