ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட் பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல் பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம் வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும் விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன் தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே