Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3122
இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்

எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்
எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்

இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்
செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்

சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்

உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.