Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3764
இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே 

இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென் 
புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும் 

பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன் 
பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த 

பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம் 
திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.