Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4102
உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ 

டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும் 
தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே 

ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி 
எண்ணியஎன் எண்ணம்எலாம் எய்தஒளி வழங்கி 

இலங்குகின்ற பேர்அருளாம் இன்னமுதத் திரளே 
புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே 

புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.